திருவையாறு. ஜன.28: திருவையாறு வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையத் திட்ட விவசாயிகள் தொழில் நுட்ப பயிற்சி உழவர் ஆர்வலர்குழு, உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பயிற்சி கண்டமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. உதவி வேளாண்மை அலுவலர் உமாபிரியா வரவேற்றார். பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் குமரன் தலைமை வகித்து பேசுகையில், இத்திட்டத்தின் நோக்கமானது சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து குழுக்களாக செயல்பட்டு உழவர் ஆர்வலர் குழுவாக அமைத்து பின்னர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக மாறுவதன் மூலம் உயர் தொழில் நுட்பங்கள் நிதி ஆதாரத்திற்கான வழிவகை பெறுதல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருள் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குதல்,