சமத்துவ பொங்கல் விழா

கொடைக்கானல், ஜன.28: கொடைக்கானல் வில்பட்டி பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. டிஎம்ஐ தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி மேரி தலைமை தாங்கினார். மேல்மலை மற்றும் மலைவாழ் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்ட இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு கோலப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. டிஎம்ஐ அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Related Stories: