சென்னை: உலக நாடுகளின் புத்தகக் கண்காட்சிகளை பார்த்து, சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை நடத்துகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அளவுக்கு நாங்கள் திருக்குறளை கொண்டு சென்றுள்ளோம். சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 102 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
