சேலம்: சேலம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் அனுமதியின்றி நடந்த எருதாட்டப் போட்டிகளில் மாடு முட்டி இருவர் உயிரிழந்தனர். செந்தாரப்பட்டியில் அனுமதியின்றி நடந்த எருதாட்டப் போட்டியில் மாடு முட்டியதில் சக்திவேல் என்பவர் பலியானார். கொண்டையம்பள்ளியில் நடந்த எருதாட்டப் போட்டியில் மாடு முட்டியதில் வினிதா (30) என்பவர் உயிரிழந்தார்.
