மணல் கடத்திய 2 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, ஜன. 27: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையானந்தல் கிராமத்தில் மணல் கடத்தி வந்த ஒரு டிராக்டர் மற்றும் ஒரு மினி டெம்போவை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட சேகர்(34), ஜெயச்சந்திரன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

Related Stories: