காரியாபட்டி, ஜன. 26: காரியாபட்டியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை தாசில்தார் தனக்குமார் துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேனரில் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர். காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய பேரணி முக்குரோடு வழியாக காரியாபட்டி பஸ்நிலையம் வந்தடைந்தது.