திருமங்கலம், ஜன. 26: மதுரையில் எய்ம்ஸ் அமையாவிடில் பொது வாழ்விலிருந்து விலக தயார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணியில், புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், மொழிபோர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசுகையில், ‘தாய்மொழிக்காக உயிரைக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஆண்டுதோறும் மொழிப்போர் தியாகிகளுக்காக வீரவணக்க நாளை கடைப்பிடித்து வருகிறோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருமா? வராதா? என்ற ஐயத்தை சிலர் எழுப்புகின்றனர்.