பரமக்குடியில் 39 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பரமக்குடி, ஜன.20: பரமக்குடி அரசு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பரமக்குடி அகில இந்திய மருத்துவ குழுவில் உள்ள தனியார் மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவ உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். நேற்று டி.பி.எச் மருத்துவ அதிகாரி, ஐடி ஒருங்கிணைப்பாளர், துணை மருத்துவ ஊழியர்கள், ஜி.ெஹச் டாக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள். ஐ.எம்.ஏ டாக்டர்கள், தனியார் மருத்துவமனை செவிலியர்கள், தனியார் பாரா மருத்துவ ஊழியர்கள் என மொத்தம் 37 பயனாளிகள் தானாக முன்வந்து, தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Related Stories: