சமையலில் பூண்டு, வெங்காயத்தால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு : 23 ஆண்டு கால மண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது!!

அகமதாபாத் : சமையலில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்தியது தொடர்பாக தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, 23 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது .குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 2002-ல் திருமணம் நடந்தது. மனைவி சுவாமி நாராயண பக்தையாக இருப்பதால், சமையலில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதை தவிர்த்து வந்தார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சமையலில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர், இது இருவருக்கும் இடையே தொடர் தகராறுகளுக்கு வழிவகுத்தது. அப்​போதும் பிரச்​சினை தீராத​தால், குழந்​தை​யுடன் கடந்த 2007ம் ஆண்டு மனை​வி, தனது தாய் வீட்டுக்​குச் சென்றார். இதனால் கடும் மன உளைச்​சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி அகம​தா​பாத் குடும்​பநல நீதி​மன்​றத்​தில் 2013ம் ஆண்​டில் மனு தாக்​கல் செய்​தார்.

இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து விவாகரத்து மனுவை விசாரித்த குடும்​ப நல நீதி​மன்​றம், இரு​வருக்​கும் விவாகரத்து வழங்கி உத்​தர​விட்​டது. மேலும், மனை​விக்கு ஜீவ​னாம்​சம் வழங்கவும் கணவருக்கு உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில் விவாகரத்து வழங்​கியது செல்​லாது என அறிவிக்கக் கோரி குஜ​ராத் உயர் நீதி​மன்​றத்​தில் மனைவி மனு தாக்​கல் செய்தார். இந்த மனு நீதிப​தி​கள் சங்​கீதா விஷேன், நிஷா தாக்​கூர் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விவகாரத்தை குடும்​ப நல நீதி​மன்​றத்​தில் எதிர்க்கவில்லை என்று தெரிந்​ததும், மனை​வி​யின் மனுவை குஜராத் உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. மேலும், நிலு​வை​யில் உள்ள ஜீவ​னாம்ச தொகையை தவணை முறை​யில் நீதிமன்றத்​தில் செலுத்​தும்​படி கணவருக்கு நீதிப​தி​கள் உத்தரவிட்டனர்.

Related Stories: