திருப்புத்தூர், ஜன.13: திருப்புத்தூர் வீரஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மேலக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலையில் ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் வீர ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.