குன்னுர்: குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருக்கு இன்று நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் ராணுவத்தின் சார்பில் நினைவஞ்சலி செய்யப்பட்டது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி காமண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மனீஷ் எர்ரீ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
