சங்கரன்கோவில், ஜன. 13: சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்டத் தலைவர் முருகன், நகரச் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சங்கர் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் திருமுருகன் சிறப்புரையாற்றினர்.