புதுடெல்லி: தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில், பிஸ்டல், ரைபிள், ஷாட்கன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டியிட, 16,000 வீரர்கள் தகுதி பெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த ஆண்டு நடந்த தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு, 13,500 பேர் தகுதி பெற்றதே சாதனை எண்ணிக்கையாக இருந்தது. அடுத்த ஒரு மாதம், பல்வேறு பிரிவுகளில், பல்வேறு வயதினருக்கு, துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற உள்ளன.
