புதிய பொறுப்பாளருக்கு வாழ்த்து

பொள்ளாச்சி, ஜன.11: திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட, உடுமலை சட்டமன்ற தொகுயில் உள்ள பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் கிழக்கு பகுதி, தி.மு.க. பொறுப்பாளராக கமலகண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று அவர், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில, குண்டலபட்டி ராமுக்கவுண்டர், தங்கவேலு, அருண்குமார், ஊராட்சி உறுப்பினர் சக்திவேல், சிஞ்சுவாடி ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், ராமகிருஷ்ணன்,  சரவணக்குமார், சார்பு அணி நிர்வாகிகள் சேரன்நகர் சுரேஷ், இளமாறன், சேர்வைகாரன் பாளையம் ஊராட்சி தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: