வருகிற 2,3ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடுதேடி விநியோகம்

அரியலூர், நவ.29: அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, அரியலூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதார்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 25,674 குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் 2, 3 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில், குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

 

Related Stories: