விருதுநகர், ஜன. 6: விருதுநகரில் பாஜ மாவட்ட தலைவர் கஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: பாரதிய ஜனதா சார்பில் ‘நம்மூர் பொங்கல்’ என்ற நிகழ்ச்சி ஜன.10ல் விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில் உள்ள 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் முன்பாக 2 ஆயிரம் பெண்கள் பொங்கல் வைத்து, போட்டிகள் நடத்தி கொண்டாட உள்ளோம். மதியம் 3 மணியளவில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் கவுதமி விழாவில் பங்கேற்க உள்ளார்.