தேவாரம், ஜன. 6: கேரளாவிலிருந்து தேவாரத்திற்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள 3 மூட்டை ஏலக்காய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள 8ம் மைல் பகுதியில் இருந்து லாரியில் 204 ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, தேவாரத்தில் உள்ள ஏலக்காய் கமிஷன் கடைக்கு, கூடலூர் எருமைக்காரன் தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார் (34) என்பவர் ஓட்டி வந்தார். இடையில், லாரியை கம்பத்தில் நிறுத்திவிட்டு, அவர் டீ சாப்பிட்டதாக கூறப்படுகிறது.