கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப்பணியிடங்களுக்கு நாளை கலந்தாய்வு

மதுரை, ஜன. 1: பள்ளி கல்வித்துறை சார்பில், 2018-19ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஆசிரியர் தேர்வுவாரியத்தால் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியிட ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு எமிஸ் இணையதளம் மூலம் நாளையும் (2ம் தேதி), நாளை மறுநாளும் (3ம் தேதி) காலை 8 மணியளவில், மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடக்கிறது. மேலும் ஆசிரியர் தேர்வுவாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் பட்டியலின்படி, வரிசை எண் 1 முதல் 400 வரை நாளையும், 401 முதல் 742 வரை 3ம் தேதியும் நடக்கிறது. சமூக இடைவெளியை பின்பற்றி, நடைபெறும் இக்கலந்தாய்வில் பங்கேற்கும் பணிநாடுநர்கள் முகக்கவசம் அணிந்து, உரிய அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். இத்தகவலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories: