சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக எண்ணூரில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. விருஞ்சிபுரம் 11 செ.மீ., கத்திவாக்கம் 10 செ.மீ., விம்கோ நகரில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாதவரம், மணலி புதுநகர், மணலி, மேடவாக்கத்தில் தலா 8 செ.மீ. மழையும், பொன்னேரி, அம்பத்தூர், பேசின் பாலம், ஆவடி, பெரம்பூர், தண்டையார்பேட்டையில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரு இடத்தில் மிக கனமழையும் 16 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக எண்ணூரில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பதிவு!!
- எண்ணூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- விருஞ்சிபுரம்
- Kathivakkam
- விம்கோ நகர்
- மாதவரம்
- மணாலி…
