தேன்கனிக்கோட்டை, டிச.31: தளி ஒன்றியத்தில் மருதனப்பள்ளி, அரசகுப்பம், தண்டரை, மல்லசந்திரம் ஆகிய ஊராட்சிகளில், மக்கள் கிராம சபை கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதிமுக அரசின் அவல நிலையை எடுத்துரைத்து பேசினார். கூட்டத்தில், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், பேரூர் செயலாளர் சீனிவாசன், அவைத்தலைவர்கள் நாகராஜ், கிரிஸ், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுநாத், ஊராட்சி தலைவர்கள் சுரேகா முனிராஜ், துரைசாமி, ரகு, ஒன்றிய கவுன்சிலர் திம்மராயப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.