திருப்பூர், டிச.31: முத்திரைத்தாள் விற்பனையில் நடக்கும் முறைகேடு கள ஆய்வு மூலம் கண்டறியப்பட வேண்டும் என, நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் சார்பில் நுகர்வோர் தின விழா திருமுருகன்பூண்டியில் நேற்று நடந்தது. அதன் தலைவர் காதர்பாஷா தலைமை வகித்தார். பொது செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சென்னியப்பன், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் கவிதா, நுகர்வோர் சட்டம் குறித்து பேசினார். பூண்டி ரோட்டரி தலைவர் ஹரிவீர விஜயகாந்த் பேசினார்,
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : பூண்டி பேரூராட்சி, சிறப்பு நிலை தகுதிக்கு உயர்ந்துவிட்ட நிலையில் நவீன பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். அதுவரை கூப்பிடு பிள்ளையார் கோவில் ஹவுசிங் யூனிட் அருகில், அனைத்து பஸ்களும் சில நிமிடம் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.