போடி அருகே டயர் வெடித்து வாலிபர் பலி

போடி, டிச. 28: போடி அருகே தேவாரம் அய்யப்பன் கோயில் தெருவை சேர்ந்த செல்வம் (23). கூலி வேலை செய்து வந்தார். போடி அருகே வாளையாத்துப்பட்டியில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வந்தார். நேற்று பூஜைக்காக டூவீலரில் உறவினர் வீட்டிற்கு சென்றார். நாகலாபுரம் இந்திரா காலனி வாட்டர் டேங்க் அருகே வந்த போது டூவீலரின் பின் டயர் வெடித்தது. இதனால் கட்டுபாட்டை இழந்து செல்வம் கீழே விழுந்தார். இதில் அவருக்கு முகம், காது உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தனது தந்தை வீரணனுக்கு செல்வம் செல்போனில் தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து செல்வத்தை போடி ஜிஎச்சிற்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே செல்வம் இறந்து விட்டதாக கூறினார். இந்த விபத்து குறித்து போடி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: