தென்காசி, டிச. 27: கொரோனா பரவலால் பட்டாசு வியாபாரம் 20 சதவீதம் குறைந்துள்ளதாக விற்பனையாளர் சங்க மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் வேதனையுடன் தெரிவித்தார். பட்டாசு விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. மாவட்ட கவுரவத் தலைவர் இப்ராஹிம், அல்லித் துரை, கண்ணன், சங்கரநாராயணன் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹபிருல் ரிபாய், மாநிலசெயற்குழு உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட செயல் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன், மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன், மாநில பொருளாளர் கந்தசாமி ராஜன், மாநில துணை தலைவர்கள் ராஜசேகரன், வல்லப கணேசன், ரவி, ராஜேந்திரன், மாநில இணைச்செயலாளர் கண்ணன், மாநில துணைச்செயலாளர்கள் சிவராமன் வீரப்பன், பிரபாகரன், திருப்புகழ் ராஜா, மாநில துணை பொருளாளர் பாண்டியராஜன், தென்காசி மாவட்டத் தலைவர் பால்ராஜ், செயலாளர் குழந்தைவேல், பொருளாளர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் பக்கீர் மைதீன், துணைச்செயலாளர் ரமேஷ், இணைச்செயலாளர் பாலகுமார் பேசினர்.