ஊட்டி, டிச.26: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் உள்ள பெரும்பாலான நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு நிலவும் இதமான குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு சமயங்களில் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள். அதற்கேற்ப ஊட்டியில் உள்ள நட்சத்திர விடுதிகள், ஓட்டல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஓட்டல்கள் மின்ெனாலி அலங்காரம் செய்யப்பட்டு இரவு நேர பார்ட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். தற்போது, கொரோனா காரணமாக ஊரடங்கு தளர்வுக்கு பின் கடந்த 7ம் தேதி முதல் அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டன. இதன்காரணமாக, நீலகிரிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.