வியாபாரி பலி

கெங்கவல்லி, டிச.25: கெங்கவல்லி அருகே, 74 கிருஷ்ணாபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (58) பால் வியாபாரி. இந்நிலையில், நேற்று காலை பால் விநியோகம் செய்துவிட்டு, கிருஷ்ணாபுரம் கூட்டு ரோடு நெடுஞ்சாலையில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது தம்மம்பட்டியில் இருந்து தலைவாசல் நோக்கி கிழங்கு லோடு ஏற்றி வந்த லாரி, துரைசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: