விருதுநகர், டிச.24: கடந்த ஆண்டுக்கான பொங்கல் வேஷ்டி, சேலையே இன்னும் வழங்கவில்லை என கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு பெரியபேராலி கிராமமக்கள் நேற்று வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், பெரிய பேராலி கிராம மக்களுக்கு கடந்த பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய இலவச வேஷ்டி, சேலை இன்றுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக கடந்த நவ.9ல் மனு அளித்தோம்.