தண்டையார்பேட்டை: காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டார். அப்போது காசிமேடு மீனவ கிராம மக்கள் தங்கள் பகுதி பிரச்னைகளை கூட்டத்தில் தெரிவித்தனர். பின்னர் ஆ.ராசா பேசியதாவது, மீனவ மக்களின் எல்லா பிரச்னைகளையும் கலாநிதி வீராசாமி நாடாளுமன்றத்தில் பேசுகிறார். என்றாவது ஜெயக்குமார் முதலமைச்சரிடம் பேசியுள்ளாரா சில நாட்களுக்கு முன் என்னுடன் அதிமுக அரசை விவாதத்திற்கு அழைத்தேன். அதற்கு வரவில்லை கடிதம் மூலம் கூட பதில் அளிக்கும் யோக்கியதை இல்லை.