பந்தலூர்,டிச.23: பந்தலூர் அருகே பாக்கனா பகுதியில் வசித்து வருபவர் முகமது சுலைமான் (23). இவர் நேற்று முன்தினம் இரவு பாடந்தொரை பகுதிக்கு சென்று திரும்பி வரும்போது பாக்கனா அருகே காட்டு யானையை பார்த்து பைக்கை நிறுத்திவிட்டு யானையிடம் இருந்து உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தார். அப்போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். யானையிடம் இருந்து உயிர் தப்பியவர் கேரளா மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆக்ரோசம் அடைந்த யானை பைக்கை கீழே தள்ளி சேதப்படுத்தியது.