விளாத்திகுளம், டிச.18: விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், போனஸ் நாள் கணக்கில் அறிவிக்க வேண்டும், ஜமாபந்தி படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகராஜ் தலைமை வகித்தார். வட்ட தலைவர் குப்புராஜ் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் சாலமோன், பொருளாளர் சண்முகராமநாதன், நிலஅளவையர் சங்கம் வெங்கடேஷ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற சங்க தலைவர் சுப்பையா, நிர்வாகி முனியசாமி உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.