புதுக்கோட்டை,டிச.16: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறும் கூட்டத்திற்கு முறைப்படி மாவட்ட நிர்வாகத்தால் தனக்கு தகவல் சொல்லப்படுவதில்லை என எம்பி நவாஸ்கனி குற்றச்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மேல ராஜவீதி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, அக்கட்சியின் மாநில முதன்மை துணைத் தலைவரும் முன்னாள் எம்பியுமான அப்துல்ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.