விழுப்புரம், டிச. 15: விழுப்புரம் ரவுடியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து கொலை செய்த வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். விழுப்புரம் அடுத்த கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் பிரபல ரவுடி தொப்பை விஜி (எ) விஜி (36) வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் மீது விழுப்புரம் நகரம் மற்றும் தாலுகா காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. விஜியை கொலை செய்த சிலம்பரசன் (32) அவரது குடலை உருவி கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு கொலை செய்த இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விழுப்புரம் நகர காவல்நிலைய போலீசார் சிலம்பரசனிடமிருந்து கத்தியை பிடுங்க முயற்சி செய்தனர். ஆனால் ஆக்ரோஷத்தில் இருந்த சிலம்பரசன் போலீசாரின் பேச்சை மதிக்காமல் மீண்டும் விஜியை கத்தியால் வெட்டிவிட்டு விழுப்புரத்தில் இனி தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள் என்று, சூரசம்ஹாரம் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.சிலம்பரசன் அளித்த வாக்குமூலம் தொடர்பாக போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட விஜிக்கு சிலம்பரசன் உறவினர். சிலம்பரசன் மனைவியுடன் கடந்த 4 ஆண்டுகாலமாக விஜி கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.