மதுரை, டிச.15: சமையல் எண்ணெய் சில்லரை விற்பனை செய்ய ஓராண்டு காலம் நீட்டிப்பு வழங்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மதுரை ஆயில் சீட்ஸ் சங்க தலைவர் மகேந்திரன், முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் சிவஞானத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘‘கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உணவு எண்ணெய் தொழிலை சார்ந்துள்ள பல லட்சக்கணக்கான சிறிய, நடுத்தர, மொத்த சில்லரை வணிகர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வருகின்றனர்.
திருமணங்கள், ஓட்டல்கள், கோயில் திருவிழாக்கள், ஸ்நாக்ஸ் தயாரிப்புகள் என வணிகம் முழுமையாக செயல்படாத காரணத்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கி போயுள்ளது.