மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 644 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 644 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மொத்தமாக 644 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. அதில் அடையாளமாக 14 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணிநியமன ஆணைகளை பெறக்கூடிய அனைவரும் அங்கு வந்திருந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பொது சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு இயக்கத்திற்காக தேர்தெடுக்க பட்ட 182 மருத்துவ அலுவலர்கள்,

மருத்துவ மற்றும் ஊரக நல பணி இயக்கத்திற்காக தேர்தெடுக்கப்பட்ட 48 பல் மருத்துவர்கள், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்திற்காக 324 அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர்கள் மேலும் தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உதவியாளர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்கத்திற்காக தேர்தெடுக்கப்பட்ட 18 உளவியல் பேராசிரியர்கள் என மொத்தம் மருந்து உதவியாளர்கள்,

கட்டுப்பாட்டு இயக்கத்திற்கு 17 பேர், குடும்பநல இயக்கத்திற்காக 54 சுகாதார பணியாளர்கள் என மொத்தமாக 644 பேருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கக்கூடிய நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்வில் சுகாதார துறை அமைச்சர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்ற நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வருகிறார்.

 

Related Stories: