திருச்சூரில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

 

கேரளா: கேரள மாநிலம் திருச்சூரில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் நோயாளி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சூர் மாவட்டம் குன்னம்குளத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆம்புலன்ஸில் இருந்த 81 வயது நோயாளி மற்றும் கார் பயணி ஒருவர் உயிரிழந்தனர்.

நேற்று மதியம் 1:30 மணியளவில் குன்னம்குளம் மாவட்டம் காணிப்பாயூரில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் மோதிக்கொண்டன. குன்னம்குளம் நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ், திருச்சூர் நோக்கிச் சென்ற கார் மீது மோதியது. மோதலின் தாக்கத்தில் ஆம்புலன்ஸ் சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

ஆம்புலன்சில் இருந்த 81 வயது குன்ஹிராமன் மற்றும் காரில் இருந்த குன்னம்குளத்தைச் சேர்ந்த 51 வயது புஷ்பா ஆகியோர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். ஒரு ஆட்டோவை முந்திச் செல்லும்போது கார் ஆம்புலன்ஸின் மீது மோதியது. காயமடைந்தவர்கள் குன்னம்குளம் மற்றும் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பலத்த காயமடைந்த குன்ஹிராமன் மற்றும் புஷ்பா ஆகியோரைக் காப்பாற்ற முடியவில்லை. விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: