உடனடியாக இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை ஆகியவைகள் இணைந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதோடு, பயணிகள் மற்றும் விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து, பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திலும் நேற்று பிற்பகலில் இருந்து, தீவிர கண்காணிப்பு சோதனைகள் நடந்து வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக உள்ள மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், நேற்று பிற்பகலில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
The post 4 விமான நிலையங்களுக்கு மிரட்டல் சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அமல் appeared first on Dinakaran.