431 போலீசார் பணியிடமாற்றம்

மதுரை, ஆக. 8: மதுரை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிறப்பு எஸ்ஐ,கள், ஏட்டுகள், போலீசார் என 431 பேர் நேற்று ஒரே நாளில் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி அவர்கள் பணியில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து நகர் எல்லைக்குள் உள்ள மற்றொரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணியில் இருப்போர் வழக்கமான நடைமுறைப்படி, போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின்படி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் கூறினர்.

The post 431 போலீசார் பணியிடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: