3,42,185 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 1,04,141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் திருத்தக் காலம், 2023 (காலாண்டு 3)-ன் 2023ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,10,39,316 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,00,29,237, பெண் வாக்காளர்கள் 3,10,02,098 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,981 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாரல் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி வரும் 21ம் தேதி முதல் தொடங்கப்பெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post 21ம் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.