போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற முதல் நாள், ‘சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி என்றும், ‘ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் புரியவைப்போம்’ என ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை அவர் ேமற்கொண்டு வருகிறார். மேலும், பெருநகர காவல்துறையில் உள்ள 104 காவல் நிலையங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருப்பிடங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிந்தார். அதன்படி இன்ஸ்பெக்டர்கள் ஏ பிளஸ், ஏ மற்றும் பி, சி கேட்டகிரியாக வகைப்படுத்தி ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் ெசன்று உறுதிப்படுத்தினர்.
கமிஷனரின் அதிரடி நடவடிக்கையால் ரவுடிகளில் பலர் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கூடுதல் டிஜிபி அருண் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற 56 நாட்களில் பிரபல ரவுடிகள் உள்பட 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஏ பிளஸ் மற்றும் ஏ கேட்டகிரியை சேர்ந்த 31 ரவுடிகள், 86 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் அடங்குவார்கள். மேலும், கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 32 குற்றவாளிகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சம்பந்தப்பட்ட 33 குற்றவாளிகளும் அடங்குவார்கள்.
The post போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்ற பின் சென்னையில் 56 நாட்களில் குண்டாசில் 150 பேர் கைது: ‘ஏ’ கேட்டகிரி ரவுடிகள் மட்டும் 31 பேர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.