புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை, பிப். 26:  உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து எடைக்கல் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், உளுந்தூர்பேட்டை ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆசனூர், குருபீடபுரம், பில்லராம்பட்டு, புகைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பதுக்கி வைத்து ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கோவிந்தசாமி (33), அகஸ்டின் (32), வெங்கடாஜலபதி (66), ராஜேந்திரன், ஏழுமலை, ராமன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: