விழுப்புரம், பிப். 26: விழுப்புரம் அடுத்த கோலியனூர் கூட்ரோட்டில் விழுப்புரம் மதுவிலக்கு ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியிலிருந்து 300 மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.