மாணவர்கள் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

விக்கிரவாண்டி, பிப். 25: மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. மயிலம் ஒன்றியத்திலுள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கான பாதுகாப்புகள் குறித்த பயிற்சி முகாம் வட்டார வளமையத்தில் நடந்தது. வட்டார மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் அருளப்பன் வரவேற்றார்.  இதில் ஆசிரியர்களுக்கு தீ தடுப்பு முறைகள், பள்ளி சுகாதாரம், கட்டிட உறுதி தன்மை, ஆய்வக பாதுகாப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, தமிழாசிரியர் ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமையாசிரியர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

Related Stories: