கருவலூரில் குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி

அவிநாசி, ஜூலை23: அவிநாசி அருகே கருவலூரில் தொடர்ந்து 4 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  அவிநாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த  7 நாட்களாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆற்றுக் குடிநீர் விநியோகம் முன் அறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடிநீரை அதிகவிலை கொடுத்து வாங்குகின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக சுழற்சி முறையில் சீரான குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: