தண்ணீர் தேடி வந்த போது நாய் கடித்து புள்ளிமான் சாவு

தேன்கனிக்கோட்டை, மே 23: தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் ஏரி வனப்பகுதியில் இருந்து, புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. இந்த மானை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த மான் அங்கேயே இறந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாஜலம் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மானை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வனப்பகுதியில்  கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள்  தண்ணீர் தேடியும், உணவுக்காகவும் ஊருக்குள் நுழைந்து பலியாகி வருவது தொடர்கதையாகி வருகிறது.

Related Stories: