திருப்பூர், மே 22: திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் வெளியூர் நபர்களை தங்க வைக்க வேண்டாம் என எஸ்பி கயல்விழி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கட்சி ரீதியாகவும், ஜாதி மற்றும் மத ரீதியாகவும் வெளியூர் நபர்களால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.