வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விடுதியில் வெளியூர் நபர்களை தங்க வைக்க வேண்டாம்

திருப்பூர், மே 22:  திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் வெளியூர் நபர்களை தங்க வைக்க வேண்டாம் என எஸ்பி கயல்விழி அறிவுறுத்தி உள்ளார்.  இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கட்சி ரீதியாகவும், ஜாதி மற்றும் மத ரீதியாகவும் வெளியூர் நபர்களால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், அவர்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்குவதற்கு வரலாம். எனவே, உரிமையாளர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியூர் நபர்களை தங்க வைக்க வேண்டாம். சந்தேகப்படும் வகையில் யாராவது தங்கியிருந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100 மற்றும் திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு 0421 -2970017, 94981 01320 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Related Stories: