உளுந்தூர்பேட்டை, மே 14: உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எலவனாசூர்கோட்டை, வீரமங்கலம், கீழப்பாளையம், மேலப்பாளையம், எ.புதூர், செம்பியன்மாதேவி, பரமேஸ்வரிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள், விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், வியாபாரிகள், வர்த்த நிறுவனங்களை வைத்து உள்ளவர்கள், விவசாயிகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். இது குறித்து இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.