தேன்கனிக்கோட்டையில் உலக மகளிர் தின கொண்டாட்டம்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 14: தேன்கனிக்கோட்டையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தேன்கனிக்கோட்டையில் செயல்பட்டு வரும் நியூ நவஜோதி ரிசோஸ் சென்டர் மகளிர் சங்கம் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சங்க தலைவர் சோபனா சங்கர்பிரசாத் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், பெண் கல்வி, இளம்வயது திருமணம் தடுப்பு, பெண் வன்கொடுமை சட்டம் விழிப்புணர்வு, பெண்களுக்கு சொத்தில் சம பங்கு சட்டம், மகளிர் சுய உதவிக்குழுவின் பங்கு குறித்து விளக்கி பேசினார். விழாவில் மகளிர் சுயஉதவிக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: