தீ விபத்தில் கரும்பு தோட்டம் நாசம்

செஞ்சி, மார்ச் 8:   செஞ்சி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது. செஞ்சி அருகே உள்ள மொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(50), பச்சையப்பன் (55), தேவராஜ் ஆகியோரது கரும்பு தோட்டம் அருகருகே அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் திடீரென கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து செஞ்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருந்தபோதும், தீயில், சுமார் 4 ஏக்கர் கரும்புகள் எரிந்து நாசமானது.

Related Stories: