350 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

மரக்காணம், பிப். 14: மரக்காணம் அருகே அய்வீட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் மகா(35). இவர் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து அப்பகுதியில் விற்பனை செய்து வருவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தபோது, மகா வீட்டில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 வெள்ளை நிற கேன்களில் 350 லிட்டர் எரிசாராயம் இருந்துள்ளது. இதை தொடர்ந்து சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, மகாவை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.7ஆயிரம் ஆகும்.

Related Stories: