வீட்டுமனை பட்டா கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம், பிப். 13:  சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் பகுதியில் நத்தம், பாட்டை புறம் போக்கில் 10ஆண்டுக்கு மேலாக குடியிருக்கும் ஏழை மக்களுக்கு வீட்டுமனைபட்டா கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். அரிதாஸ், சாமிதுரை, வெங்கடேசன், சண்முகம், சுப்புராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, மாவட்ட தலைவர் தாண்டவராயன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளர் சாமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: