காவல் துறையினர் ஆசியோடு ஆளும் கட்சியினர் அதிகாரம்ஆளும் கட்சியினரின் அதிகாரத்தோடும், காவல் துறையின் ஆசியோடு ஆண்டிபட்டி நகரைச் சுற்றியுள்ள பாலக்கோம்பை, அழகாபுரி, தெப்பம்பட்டி, அம்மாபட்டி, காமாட்சிபுரம், எரதிமக்காள்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, மறவபட்டி, மேக்கிழார்பட்டி, கண்டமனூர், பிச்சம்பட்டி, க.விலக்கு, கரட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கள்ள மார்க்கெட்டில் இரவு, பகல் பாராமல் மது பாட்டில்கள் விற்று வருகின்றனர்.இதனால் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் அரசு மதுபான கடைகளை காலை 12 மணிக்கு திறந்து இரவு 10 மணி வரை விற்பதற்கு அனுமதித்துள்ளது. ஆனால் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்கின்றனர். இதனால் இளைய சமுதாயத்தினர் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே மாவட்ட கலெக்டர் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் கள்ள மார்க்கெட்டில் மது, கஞ்சா விற்பனை செய்பவர்களையும், விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.